நில வளத்ததையும் நீர் வளத்தையும் தலைசிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக பல்வேறு ஆற்றுப்படுக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரதான திட்டங்களை தயாரிப்பதனூடாக பயிர்ச்; செய்கைக்காக புதிய காணிகளுக்கும் இருக்கின்ற காணிகளுக்கும் நீர்ப்பாசனம் வழங்கும் முகமாக பாதுகாப்பான வடிகால் அமைப்புகள்ää வெள்ளத்தடுப்பு அணைகள் மற்றும் உவர் நீர் தடுப்பு அணைகள் அமைக்கும் கருத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி திணைக்களத்தின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் மேலும் நீர்ப்பாசனதுறையை முன்னேற்றுமுகமாக 2012ஆம் ஆண்டில் அரசாங்கம்;; அவசர இயற்கை அனர்த்த புனரமைப்புத் திட்டத்தினை செயற்படுத்தியதனூடாக நீர்ப்பாசன கட்டமைப்புக்களை நிர்மாணிக்கவும் புனரமைப்பு செய்யவும் மூன்று மாவட்டங்களுக்குமாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனருத்தாரன வேலைகள் யாவும் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள செம்மணி குளம் ää பாவங்கை அணைக்கட்டு என்பன முறையே 31 மில்லியன் ரூபா மற்றும் 17 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனருத்தாரனம் செய்யப்பட்டு விவசாயி;களிடம் மிக விரைவில் கௌரவ மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சரினால் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேற்படி திட்டத்தினால் மூன்று மாவட்டங்களிலும் சுமார் 3500 ஏக்கர் விவசாயக்காணிகள் புதிதாக நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொள்வதனூடாக சுமார் 2750 விவசாயக்குடும்பங்கள் நேரடியாக நன்மை பெறுகின்றன.
நடப்பாண்டில் இத்திணைக்களத்தினுடாக மூன்று மாவட்டங்களுக்குமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியாக 41 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு 26 வேலைகளும் மீண்டெழும் செலவினமாக சுமார் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பபட்டு 35 பராமரிப்பு மற்றும் வெள்ளத்தினால் பழுதடைந்த நீர்ப்பாசன கட்டமைப்புகளை திருத்தும் வேலைகளும்; நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேலும் 2015 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன கட்டமைப்புக்களை நிர்மாணிக்கவும் புனரமைப்பு செய்யவும் 415 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாகாண திட்டமிடல் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எமது திணைக்களமானது விவசாயிகளுக்கு சிறந்த சேவையினை வழங்குவதோடு மட்டுமல்லாது இத்திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குளத்தினை சூழவுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் முகமாக நன்;னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களையும் வேறு திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.இதன் ஒருகட்டடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மியான்கல் குளத்தினில் 100,000 மீன்குஞ்சுகளும் புளுகுநாவி மற்றும் கங்காணியார் குளங்களில் முறையே 200,000 மீன்குஞ்சுகள் ää 150,000 மீன்குஞ்சுகளும் விடப்பட்டுள்ளதனூடாக நன்னீர் மீன்வளர்ப்பினை ஊக்கப்படுத்தி அம்மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நோக்கம் ,தூரநோக்கு பார்வை மற்றும் அதன் சேவைகளைகளை சகல மக்களும் அறிந்துகொள்ளும் முகமாக www.irrigationep.weebly.com எனும் இணையத்தளம் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இத்திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் சகல திட்டங்களுக்குமான நிதி நிலை அறிக்கைகள் மற்றும் பௌதீக நிலையினை காட்டும் புகைப்படங்கள்ää நடைபெறும் மீளாய்வு கூட்டங்கள் அத்துடன் திணைக்கள நிகழ்வுகளையும் இவ்விணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேலும் நீர்ப்பாசனதுறையை முன்னேற்றுமுகமாக 2012ஆம் ஆண்டில் அரசாங்கம்;; அவசர இயற்கை அனர்த்த புனரமைப்புத் திட்டத்தினை செயற்படுத்தியதனூடாக நீர்ப்பாசன கட்டமைப்புக்களை நிர்மாணிக்கவும் புனரமைப்பு செய்யவும் மூன்று மாவட்டங்களுக்குமாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனருத்தாரன வேலைகள் யாவும் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள செம்மணி குளம் ää பாவங்கை அணைக்கட்டு என்பன முறையே 31 மில்லியன் ரூபா மற்றும் 17 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனருத்தாரனம் செய்யப்பட்டு விவசாயி;களிடம் மிக விரைவில் கௌரவ மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சரினால் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேற்படி திட்டத்தினால் மூன்று மாவட்டங்களிலும் சுமார் 3500 ஏக்கர் விவசாயக்காணிகள் புதிதாக நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொள்வதனூடாக சுமார் 2750 விவசாயக்குடும்பங்கள் நேரடியாக நன்மை பெறுகின்றன.
நடப்பாண்டில் இத்திணைக்களத்தினுடாக மூன்று மாவட்டங்களுக்குமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியாக 41 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு 26 வேலைகளும் மீண்டெழும் செலவினமாக சுமார் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பபட்டு 35 பராமரிப்பு மற்றும் வெள்ளத்தினால் பழுதடைந்த நீர்ப்பாசன கட்டமைப்புகளை திருத்தும் வேலைகளும்; நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேலும் 2015 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன கட்டமைப்புக்களை நிர்மாணிக்கவும் புனரமைப்பு செய்யவும் 415 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாகாண திட்டமிடல் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எமது திணைக்களமானது விவசாயிகளுக்கு சிறந்த சேவையினை வழங்குவதோடு மட்டுமல்லாது இத்திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குளத்தினை சூழவுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் முகமாக நன்;னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களையும் வேறு திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.இதன் ஒருகட்டடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மியான்கல் குளத்தினில் 100,000 மீன்குஞ்சுகளும் புளுகுநாவி மற்றும் கங்காணியார் குளங்களில் முறையே 200,000 மீன்குஞ்சுகள் ää 150,000 மீன்குஞ்சுகளும் விடப்பட்டுள்ளதனூடாக நன்னீர் மீன்வளர்ப்பினை ஊக்கப்படுத்தி அம்மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நோக்கம் ,தூரநோக்கு பார்வை மற்றும் அதன் சேவைகளைகளை சகல மக்களும் அறிந்துகொள்ளும் முகமாக www.irrigationep.weebly.com எனும் இணையத்தளம் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இத்திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் சகல திட்டங்களுக்குமான நிதி நிலை அறிக்கைகள் மற்றும் பௌதீக நிலையினை காட்டும் புகைப்படங்கள்ää நடைபெறும் மீளாய்வு கூட்டங்கள் அத்துடன் திணைக்கள நிகழ்வுகளையும் இவ்விணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.